லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என பெண் நூதன போராட்டம்

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பகத்சிங் காலனியைச் சேர்ந்த யமுனா என்பவர், தமக்கு சொந்தமான நிலத்தில்,வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என பெண் நூதன போராட்டம்
x
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பகத்சிங் காலனியைச் சேர்ந்த யமுனா என்பவர், தமக்கு சொந்தமான நிலத்தில்,வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டிருந்தார். வீடு கட்டும் பணி தொடர வேண்டுமானால், லஞ்சம் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி வருவாய் துறை அதிகாரி வெங்கடேஸ்வரலு மிரட்டியதாகவும், லஞ்சம் தர மறுத்ததால் வீட்டை ஆள் வைத்து இடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யமுனா, அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க தமக்கு பிச்சை போடுங்கள் என்ற பதாகையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்