ஆளும் கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். கட்சியினருக்கும் இடையே மோதல்

சித்தூரில் ஆளும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆளும் கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். கட்சியினருக்கும் இடையே மோதல்
x
அங்குள்ள சந்திரகிரி தொகுதியில், முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் விழாவுக்கு ஆளும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா மேடைக்கு அருகில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு விழாவும் நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு கூடிய இரு கட்சித்தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது. இதையடுத்து,  அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்