சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.
x
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர் பெற்ற அறிக்கையில், இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்