தொடங்கியது கும்பமேளா : பக்தர்களால் சூழப்பட்ட பிரயாக்ராஜ் நகர்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா தொடங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா தொடங்கியுள்ளது. இன்று முதல் மார்ச் நான்காம் தேதி மகா சிவராத்திரி வரை 48 நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது. இன்று விழா தொடங்கியுள்ளதால், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், உத்தரபிரதேச மாநிலத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பிரயாக்ராஜ் நகரில், இதற்காக பிரத்யேகமாக தற்காலிக பிரம்மாண்ட நகர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. புனித நீராடியும், ஊர்வலமாக சென்றும் சாதுக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story