காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : களை கட்டும் நவீன வெப்ப கருவிகள் விற்பனை

ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அங்கு நவீன வெப்பமூட்டும் கருவிகள் விற்பனை களைகட்டி உள்ளது.
காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : களை கட்டும் நவீன வெப்ப கருவிகள் விற்பனை
x
ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அங்கு நவீன வெப்பமூட்டும் கருவிகள் விற்பனை களைகட்டி உள்ளது. அம்மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பருவ நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனால் குளிரிலிருந்து தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள நவீன வெப்ப கருவிகளை அதிகளவில் மக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் அறைகளை வெப்பப்படுத்தும் நவீன வெப்ப கருவிகள் விற்பனை அங்கு களைகட்டி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், கொக்கர் பஜாரில் இத்தகைய நவீன கதகதப்பு கருவிகள் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்