முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை மறித்த பாஜகவினர்: எச்சரிக்கை விடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு்வின் கான்வாயை மறித்து, பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை மறித்த பாஜகவினர்: எச்சரிக்கை விடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
x
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு்வின் கான்வாயை மறித்து, பாஜகவினர்  ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்திற்கு பிரதமர் மோடி வந்தால் அனுமதி மறுக்கப்படும் என, தெலுங்குதேசம் கட்சியினர் கூறியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் முதல்வரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு, கான்வாயை விட்டு வெளியே வந்து, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தினால் தண்டிக்கப்படுவீர்கள் என, பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், பாஜகவினர், போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை காக்கிநாடா போலீஸார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்