பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது

நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த போடப்பட்ட திட்டம் தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது
x
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டு, Harkat-ul-Harb-e-Islam என்ற பெயரில் இயங்கிய 10 பேரை தேசிய புலனாய்வு முகமை அண்மையில் அதிரடியாக கைது செய்தது. இதன் மூலம், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த போடப்பட்டிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களுடன் தொடர்புடைய உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராக்கெட் லாஞ்சரை உருவாக்க இரும்பு வாங்கி கொடுத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்