உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு புதிய வரி

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புக்காக ஜீரோ புள்ளி 5 சதவீதம் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு புதிய வரி
x
உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புக்காக ஜீரோ புள்ளி 5 சதவீதம் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு மாவட்டந்தோறும் பசுக்களை பாதுகாக்கும் கோசாலைகள் அமைக்க உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே செயல்பட்டு வரும் 16 கோசாலைகளில் உள்ள பசுக்களை பராமரிப்பதற்காக 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதுடன், ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கோசாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
   

Next Story

மேலும் செய்திகள்