திருமலையில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மஹாராஷ்டிராவில் மீட்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
திருமலையில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மஹாராஷ்டிராவில் மீட்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக  மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரசந்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருமலைக்கு சென்றுள்ளார். திருமலை அரசு பேருந்து நிலையம் எதிரே உள்ள மண்டபத்தில் இரவு அவர் தங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை வீரேஷ் காணாமல் போனதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில், அந்த குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டனர். நந்தோடு ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த கடத்தல்காரனை பிடித்த ஆந்திர தனிப்படை போலீசார், அவனிடம் இருந்து குழந்தையை மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்