ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ரத்து - காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டின் போது அக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தெலுங்கு புத்தாண்டையே கோயில்களில் கொண்டாட வேண்டும் என்று ஆந்திர மாநில அறநிலையத்துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது, இதையடுத்து நாளை நள்ளிரவு பூஜைகள் நடைபெறாது என்றும் , புத்தாண்டு அன்று கோயிலில் 4 கால அபிஷேகங்களின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story