தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு  - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு
x
கர்நாடக மாநிலம் தக்‌ஷ‌ன கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி என்ற பெண் மாவோயிஸ்ட்டையும், ராய்ச்சூர் மாவட்டதை சேர்ந்த மகேஷ் என்ற மாவோயிஸ்டையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இருவரையும் கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தலைமறைவாக உள்ள இரு மாவோயிஸ்டுகள்  குறித்து தகவல் அளிப்பவருக்கு  2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ள  தேசிய புலனாய்வு முகமை, தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கபடும் என தெரிவித்துள்ளது. இது குறித்த போஸ்டர்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரை சோதனை சாவடி, பவானிசாகர் காவல்நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்