மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கே அதிக பலன் - முதல்வர் குமாரசாமி

மேகதாது அணை கட்டுவதால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை கட்டுவதால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களிலும் அழைத்து பேச வேண்டும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்