டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் - பொதுமக்கள் பாதிப்பு
டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு பனிபடர்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வெப்பநிலை காலை நேரங்களில் 8 டிகிரி சென்டிகிரேட்டாக இருப்பதால், குளிரைத் தாங்க தீ மூட்டம் வைத்து சமாளித்து வருகின்றனர். பகலில் கூட ஸ்வெட்டர், போர்வை உள்ளிட்டவை அணிந்தே எங்கும் செல்லக்கூடிய நிலை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story