சபரிமலைக்கு இன்று செல்ல முயன்ற 2 பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரண்டு பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற பெண்கள், போலீசாரின் அனுமதியின்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், சபரிமலைக்கு செல்ல முயன்றனர். மரக்கூட்டம் என்ற பகுதியில் இந்த இரண்டு பென்களையும் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்படும் என கருதிய போலீசார், அந்த இரன்டு பெண்களையும், சபரிமலையிலிருந்து பம்பைக்கு கீழே திருப்பி அனுப்பி வைத்தனர். பம்பையில் வைத்து அந்த இரண்டு பெண்களிடமும் முழு விசாரணை நடத்திய பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சபரிமலைக்கு செல்ல முயன்ற மலப்புரத்தை சேர்ந்த பிந்து என்ற பெண்ணின் வீட்டின் முன்பு, ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலப்புரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பிந்துவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

2 பெண்களையும் திருப்பி அனுப்பிய போலீசார்

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்படும் என கருதிய போலீசார், அந்த இரன்டு பெண்களையும், சபரிமலையிலிருந்து பம்பைக்கு கீழே திருப்பி அனுப்பி வைத்தனர். பம்பையில் வைத்து அந்த இரண்டு பெண்களிடமும் முழு விசாரணை நடத்திய பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்