பெய்ட்டி புயல் - 28 விரைவு ரயில்கள் ரத்து

பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் 28 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெய்ட்டி புயல் - 28 விரைவு ரயில்கள் ரத்து
x
பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் 28 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெய்ட்டி புயலானது ஆந்திரா கடலோர மாவட்டங்களான  ஓங்கோல்,காக்கிநாடா இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம் வழியாக செல்லும் 28 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்