தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
கர்நாடக மாநிலம், மைசூருவில் ரயில் தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. நாகர்ஹொலே வனப்பகுதியில், வீரனஹொசல்லி என்ற இடத்தில் ரயில்வே பாதையில் இருந்த தடுப்பு வேலியை, ஆண் யானை ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது வேலியில் சிக்கி கொண்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்தனர்.
Next Story