உர்ஜித் பட்டேல் ராஜினாமா : "வங்கித்துறைக்கு பெரும் இழப்பு" - பிரதமர் மோடி
உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் கடந்த 6 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது தலைமையின் கீழ் தான் ரிசர்வ் வங்கி நிதி நிலைத் தன்மை பெற்றதாகவும், வங்கிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Next Story