பள்ளியில் குழந்தைகளின் வாயில் "செலோடேப்" ஒட்டிய ஆசிரியர்...

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளின் வாயில், ஆசிரியை ஒருவர் "செலோடேப்" ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பள்ளியில் குழந்தைகளின் வாயில் செலோடேப் ஒட்டிய ஆசிரியர்...
x
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளின் வாயில், ஆசிரியை ஒருவர் "செலோடேப்" ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பேசுவதைத் தடுக்கும் வகையில் அவர்களது வாயில் "செலோடேப்" ஒட்டுவது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தற்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பள்ளியின் முதல்வர் கூறும்போது, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்