வங்கிக் கடனை 100% திருப்பித் தரத் தயார் - விஜய் மல்லையா

வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
வங்கிக் கடனை 100% திருப்பித் தரத் தயார் - விஜய் மல்லையா
x
* தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 10 -ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* இந்த நிலையில் வங்கிகளின் கடனை 100 சதவீதம் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக சமூக வலைதளத்தில் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டிலேயே வங்கிகளின் கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது கோரிக்கையை வங்கிகளும், அரசும் ஏன் நிராகரிக்க வேண்டும் என்றும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்