"ராகுல் தான் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்" - பஞ்சாப் அமைச்சர் சித்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தம்மை பாகிஸ்தான் அனுப்பி வைத்ததாக பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.
ராகுல் தான் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் - பஞ்சாப் அமைச்சர் சித்து
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தம்மை பாகிஸ்தான் அனுப்பி வைத்ததாக பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார். அண்மையில் கர்தாப்பூர் வழித்தடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக சித்து பாகிஸ்தான் சென்றார். இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்து, ராகுல் காந்தி தனது கேப்டன் என்றும், பாகிஸ்தானுக்கு தம்மை அனுப்பியது அவர் தான் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தம்மை பாராட்டியதாகவும், மீண்டும் பாகிஸ்தான் செல்லுமாறு கூறியதாகவும் சித்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்