பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் வாகனங்கள் உடைக்கப்பட்ட விவகாரம் : காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வாகன உரிமையாளர்கள்

புதுச்சேரியில் நேற்று நடந்த பா.ஜ.க முழு அடைப்பு போராட்டத்தின்போது, வாகனங்கள் உடைக்கப்பட்டதால், வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் வாகனங்கள் உடைக்கப்பட்ட விவகாரம் : காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வாகன உரிமையாளர்கள்
x
புதுச்சேரியில் நேற்று நடந்த பா.ஜ.க முழு அடைப்பு போராட்டத்தின்போது, வாகனங்கள் உடைக்கப்பட்டதால், வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் நேற்று பா.ஜ.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, கிழக்கு கடற்கரை சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், போலீசார் 2 வாகனங்கள் உடைக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்