பாஜகவில் இணைந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் பாராட்டு
இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இறுதியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த மாதவன் நாயர், தனது அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கு சுயநலமின்றி பாடுபடும் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக வெற்றிக்காக பணியாற்ற உள்ளதாகவும் மாதவன் நாயர் தெரிவித்தார்.
Next Story