சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை

சபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை
x
மும்பையை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளரான திருப்தி தேசாய், 6 பெண்களுடன் வரும் 16-ஆம் தேதி கேரளாவிற்கு வந்து 17-ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பயண வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர், கேரள மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள், கேரளா டி.ஜி.பி., ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம் பெண்கள் கடும் எதிர்ப்புக்கிடையே ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில், தற்போது திருப்தி தேசாயின் அறிவிப்பு பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்