அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறகிறது.
மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில், அனந்தகுமாரின் உடல் நாளை காலை 7 மணி வரை அவரது இல்லத்திலும், அதன் பின்னர் பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் காலை 9 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை, பெங்களூருவில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் அவரது உடல் வைக்கப்படுகிறது.
Next Story