மிக நீளமான, உயரமான ரயில் பாதை : இமாச்சல பிரதேசத்தில், சாதனைத் திட்டம்

இந்தியாவில், முதல் முறையாக, சுரங்கப் பாதைக்குள் ரயில் நிலையம் அமைக்கப்படுவது குறித்து விவரிக்கிறது.
மிக நீளமான, உயரமான ரயில் பாதை : இமாச்சல பிரதேசத்தில், சாதனைத் திட்டம்
x
* சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில், சுரங்கப் பாதைக்குள், மெட்ரோ ரயில் வழித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இமாச்சல பிரதேசத்தின் கீலாங் (Keylong) எனுமிடத்தில், இந்தியாவின் முதல், நீளமான சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே அமைக்க உள்ளது.

* இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் நகரத்திற்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதிகளையும் இணைக்கும் விதமாக, 498 கி.மீ. நீளத்திற்கு, சுரங்க ரயில்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது.

* வரும் 2022ம் ஆண்டில் இந்த பணிகள் நிறைவடையவுள்ளது. இதற்காக, பாதுகாப்பு அம்சங்களுடன் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது என்பதோடு, ஒவ்வொரு பயணிக்கும், oxygen mask வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில் வழித்தட திட்டத்தை நிறைவேற்ற 86 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த குறிப்பிட்ட ரயில் பாதையில், இந்தோ - திபெத்திய எல்லையில் இருந்து 120 கிமீ தொலைவிலும், மணாலியில் இருந்து மேற்கே 26 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள கீலாங் (Keylong) எனும் நகரில் சுரங்கத்திற்குள்ளேயே ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

* இதுவே, இந்திய ரயில்வே சார்பில் கட்டமைக்கப்படும் முதல் சுரங்க ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெறப் போகிறது. இது, கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைகிறது. 

* இந்த ரயில்பாதை மூலம், பிலாஸ்பூர் மற்றும் லே நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தர்நகர், மாண்டி, கீலாங், கோக்சார், தர்சா, உப்ஷி மற்றும் கரு போன்ற காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் மாநில நகரங்கள், ரயில் மார்க்கமாக இணைக்கப்படுகிறது. 

* இந்தோ - திபெத் மற்றும் இந்திய - சீனா எல்லைகளுக்கு அருகில் அமையவிருக்கும் இந்த ரயில் பாதை மூலம் எல்லைப் பகுதிகளுக்கான போக்குவரத்து எளிமை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* 74 சுரங்க பகுதிகள், 124 பெரிய பாலங்கள் மற்றும் 396 சிறிய பாலங்கள் இந்தப் பாதையில் அமைகிறது. இந்தப்பாதை அமைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் இருந்து, லே செல்வதற்கான தற்போதைய பயண நேரம் பாதியாக, அதாவது 40 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரமாக குறையும் எனத் தெரிகிறது. இந்த ரயில் பாதையில் மற்றொரு சிறப்பும் உள்ளது. 


* இந்த பாதையில், 5 ஆயிரத்து 359 மீட்டர் உயரத்தில் Taglang La ரயில் நிலையம் கட்டமைக்கப்படும் போது, அது உலகின் அதிக உயரத்தில் உள்ள ரயில் நிலையமாக இருக்கும். 

* தற்போது, சீனாவின் Qinghai மாகாணத்தில் உள்ள Tanggula ரயில் நிலையமே உலகின் அதிக உயரத்தில் இருக்கும் ரயில் நிலையமாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்