பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் கைது
x
மகாராஷ்டிர மாநிலம் பால்தார்பூர் பகுதியில் மும்பை தீவிரவாத  தடுப்பு பிரிவு மற்றும் நாக்பூர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 
இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின​ர்.

அப்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பை சேர்ந்த 2  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் ஊடுருவியுள்ளது கண்டறியப்பட்டது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு துறையினர் கொடுத்த தகவலின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மும்பை காவல்துறை அதிகாரி "தந்தி டி.விக்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நாக்பூரில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புக்கு ஸ்லீப்பர் செல் தயார் செய்யும் பணியில் 
ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்