சபரிமலை போராட்டம் : முதல் ஜாமீன் மனு தள்ளுபடி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை போராட்டம் : முதல் ஜாமீன் மனு தள்ளுபடி
x
சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் திருப்புனத்துரா பகுதியை சேர்ந்த கோவிந்த் மதுசூதனன் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சபரிமலை மோதல் சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் சிறையில் உள்ள நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் ஜாமீன் மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்