சி.பி.ஐ.-ல் தொடரும் அதிரடி மாற்றங்கள் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்

சி.பி.ஐ.-யில் தொடரும் மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
சி.பி.ஐ.-ல் தொடரும் அதிரடி மாற்றங்கள் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்
x
* டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சி.பி.ஐ. ஒரு பிரதான விசாரணை அமைப்பு என்றும், அதன் நேர்மையை பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடைபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். சி.பி.ஐ. -யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நேர்மையாக விசாரணை நடைபெறவே, 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.  

* இந்த விவகாரத்தில், முழு விசாரணையை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்