ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிக்கையாளர் செல்ல முயன்றார்.
ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்
x
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிக்கையாளர் செல்ல முயன்றார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பணிபுரியும் சுஹாசினி ராஜ், இன்று காலை, அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முற்பட்டார். பம்பையில் இருந்து  கிளம்பிய அவருக்கு, போலீசார் பாதுகாப்பு அளித்தனர். ஆனால், மாரக்கூட்டம் என்ற பகுதிக்கு சுஹாசினி ராஜ் வந்த போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். பலர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர் எதிர்ப்பு காரணமாக, சுஹாசினி ராஜ்,  கோவிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தார். 

Next Story

மேலும் செய்திகள்