சபரிமலையில் நாளை நடை திறப்பு : பெண்களை அனுமதிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பு

பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது
சபரிமலையில் நாளை நடை திறப்பு : பெண்களை அனுமதிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பு
x
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று  முக்கிய ஆலோசனை  நடத்த உள்ளது. இதில் ஐயப்பன் கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். சபரிமலையில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்