திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை கோயிலில் மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தின் வீதி உலா வந்தார்.
திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்
x
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இன்றைய தினம், கிருஷ்ணர் சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில், எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். மாடவீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி மலையப்பரை தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் பஜனைகள் பாடியபடியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்