வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் கேட்டவர் வீட்டில் சோதனை...
ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் 60 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கடப்பா மற்றும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் வருமானவரித்துறை சோதனை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என ரமேஷ் கேட்டிருந்தார். இந்நிலையில், அவரை வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story