டிட்லி புயல் கரையை கடந்தது

டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
டிட்லி புயல் கரையை கடந்தது
x
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. அது ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும்,  ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது.  இதனால் ஒடிசாவின் கஞ்சன் மாவட்டம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருகிறது. 

டிட்லி புயல் கரை கடந்தது - ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

டிட்லி புயல் காரணமாக கோபால்பூரில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் ஆய்வு செய்தார், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 15 மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்