"விவசாயிகள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்" - ஹரியானா விழாவில் , பிரதமர் மோடி அறிவிப்பு

"விவசாயிகள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்" - ஹரியானா விழாவில் , பிரதமர் மோடி அறிவிப்பு
விவசாயிகள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் - ஹரியானா விழாவில் , பிரதமர் மோடி அறிவிப்பு
x
விவசாயிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடும் என உறுதி அலித்த பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் சர்வதேச வர்த்தக சந்தையை உருவாக்குவோம் என்று அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ரோக்டாக் நகரில், ரெயில் பெட்டி பணிமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய அவர், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றார். விவசாயிகளின நலனை பாதுகாக்க மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் ஹரியானா மாநில ஆளுநர் சத்யதேவ் நரேய்ன் ஆர்யா,  அம் மாநில முதலமைச்சர் மனோகர் லால் மற்றும் மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்