"கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் சில வளரும் நாடுகளைக் காட்டிலும் மோசமாகவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும்  -  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்
x
* மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாய  சூழல் தற்போது எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

* இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளை காட்டிலும் மோசமாகவில்லை என்றும், இது போன்ற நிலையற்ற சூழல் நிலவும்போது ரிசர்வ் வங்கியின் வேலை அபரிமிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் பார்த்துகொள்வதுதான் எனவும் உர்ஜித் படேல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்