ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை : அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை

திருப்பதி அருகே, ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை : அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை
x
திருப்பதியை அடுத்த  திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர், நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, சுதாகர் மரணத்தால் அவரது மனைவி வரலட்சுமி சோகமாக இருந்து வந்தார். இந்நிலையில், தனது கணவர் தற்கொலை செய்த அதே இடத்தில் நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இருவரின் தற்கொலை குறித்து ரேணிகுண்டா ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்