குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...
குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...
x
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வெடிகுண்டை வீசி விட்டு, கைதிகள் தப்பியோடினர். கிழக்கு மிட்னாபுரில் உள்ள கோன்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, 3 கைதிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர், போலீசார் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். இதையடுத்து, 3 பேரும் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, தப்பியோடிய 3 பேரில் வெடிகுண்டு வீசிய கர்னா பேரா என்ற கைதி மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.  மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்