அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி

புதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதுவைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி
x
புதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதுவைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. புதுசேரி மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்ட நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி விடுத்த கோரிக்கையை புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்