ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி

தேசத்தின் பாதுகாவலர் என தம்மை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி
x
உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சொந்த தொகுதியான, அமேதிக்கு சென்ற ராகுலுக்கு, அப்பகுதி மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய ராகுல் காந்திக்கு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தொகுதி மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் என தம்மை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்று, அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் தர பரிந்துரை செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்