"ஆர்.எஸ்.எஸ் கொள்கையை எங்கும் திணிப்பது இல்லை" - மோகன் பகவத் பேச்சு

ஆர்.எஸ்.எஸ் தமது கொள்கையை எங்கும் திணிப்பது இல்லை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் கொள்கையை எங்கும் திணிப்பது இல்லை - மோகன் பகவத் பேச்சு
x
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் எதிர்கால பாரதம் எனும் தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு துவங்கியுள்ளது. அதில், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மாநாட்டில் பேசிய, ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தனித்துவம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தரத்திற்கு இணையாக எந்த இயக்கமும் இருக்க முடியாது என்றார். இந்த அமைப்பு தங்கள் கொள்கைகளை யாரிடமும்  திணிக்காது என்றும், அதனை பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறது என்றும்  மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் கட்டமைப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று வரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மோகன் பகவத் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஒரு போதும் விளம்பரம் தேவையில்லை என்றும் அதே சமயம், விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும் என்றும், அவை ஆக்கப்பூர்வமானதாக அமையும என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்