திருமலை பிரம்மோற்சவ விழா கோலாகலம் : சிறிய சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.
திருமலை பிரம்மோற்சவ விழா கோலாகலம் : சிறிய சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாட வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்பான பக்தர்கள், கோவிந்த கோவிந்தா என முழக்கம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். சேஷ வாகனத்தின் முன்னால், ஆண்கள், பெண்கள், பஜனைபாடிச் சென்றனர். சில பெண் பக்தர்கள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடியபடி வீதி உலா வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்