ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா வெகு விமர்சையாக களைகட்டியது.
ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு
x
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து, பட்டு வஸ்திரங்களை தலையில் வைத்தபடி எடுத்து வந்து சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

அப்போது அங்கு இரண்டு புறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்