பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார்.
பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...
x
மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 'ஜன் ஆசிர்வாத் யாத்ரா' என்ற பெயரில் அவர் மேற்கொண்டு வரும் பிரசார யாத்திரையின் ஒரு பகுதியாக, திந்தோரி என்ற இடத்துக்கு அவர் சென்றார். அப்போது, அங்குள்ள பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார். 

Next Story

மேலும் செய்திகள்