திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் அர்ச்சகர் எடுத்துச் சென்ற மலையப்ப சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவர் சிலைகளை அர்ச்சகர்கள் மீண்டும் கருவறைக்குள் கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தங்க கதவு அருகே அர்ச்சகர் கால் தடுக்கி கீழே விழுந்தார். இதில், அவரது கையில் வைத்திருந்த மலையப்ப சுவாமி உற்சவர் சிலையும் கீழே விழுந்தது. இதனையடுத்து மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக வந்து மலையப்ப சுவாமி சிலையை பத்திரமாக கையில் எடுத்தனர். பின்னர் சுவாமி சிலை கீழே விழுந்ததற்கு பரிகாரமாக  கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்