இந்திய-அமெரிக்க அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்திய-அமெரிக்க அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை
x
இந்தியா மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியத்  தரப்பில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் அமெரிக்க தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடர உள்ளது. இரு நாட்டு இடையிலான பிரச்சினை, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யா உடனான இந்தியாவின் நட்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்