டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி - விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஜந்தர் மந்தரில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், நாடாளுமன்றம் நோக்கி, முழக்கம் எழுப்பியபடி, அணிவகுத்து வந்தனர். விவசாயிகளின் பேரணியால், தலைநகர் டெல்லியில், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story