கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் "Thanks" என்ற வாசகம்

கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் Thanks என்ற வாசகம்
x
கேரளா மாநிலம் கொச்சியில்  கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர், கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அழகான ஆண் குழந்தையை அந்தப் பெண் பெற்றெடுத்தார். விமானப்படை வீரர்களின் இந்த நற்செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆங்கிலத்தில் "thanks" என்ற வாசகம், கொச்சியில் உள்ள அவர்களது வீட்டு மாடியில் எழுதப்பட்டுள்ளது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்