"ஓ" போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...

"ஓ" போட சொல்லி கொடுத்து அரங்கமே அதிரும் வகையில் இளைஞர்களை "ஓ" போட வைத்த ஆட்சியர்.
ஓ போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...
x
திருவனந்தபுரம் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு முகாமில் இரவு பகலாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஈடாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் வாசுகியும் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மண்ணை நினைவூட்டும் வகையில் தமிழ்நாட்டு கலாச்சாரமான "ஓ" போட சொல்லி கொடுத்து அரங்கமே அதிரும் வகையில் இளைஞர்களை "ஓ" போட வைத்தார். இந்நிகழ்வு உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும், அதிகாரியாக இல்லாமல் எளிமையாக இணைந்து பணியாற்றுவதை கண்டு ஆச்சரியமடைவதாகவும் முகாமில் தன்னார்வமாக பணியாற்றி வரும் தமிழக இளைஞர்கள் தெரிவித்தனர். 



Next Story

மேலும் செய்திகள்