இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் : சுதந்திர தினத்தன்று ஆச்சரியம்

குளிர் பிரதேசங்களில் மட்டுமே வாழும் பென்குயின், முதன் முறையாக இந்தியாவில் பிறந்துள்ளது.
இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் : சுதந்திர தினத்தன்று ஆச்சரியம்
x
குளிர் பிரதேசங்களில் மட்டுமே வாழும் பென்குயின், முதன்முறையாக, இந்தியாவில் பிறந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து ஹம்போல்ட் வகை பென்குயின் பறவைகள் வாங்கப்பட்டன. இந்தப் பறவைகள், மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தப் பென்குயின்களில் ஒரு பெண் பறவை, கடந்த மாதம் முட்டையிட்ட நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, பென்குயின் குஞ்சு வெளியே வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்