மழைக்கு ஒதுங்கியவருக்கு தர்ம அடி: குடிபோதையில் 4 பேர் அராஜகம்

புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை அருகே மழைக்காக சாலையோர கடையோரம் ஒதுங்கியவரை சிலர் தாக்கியுள்ளனர்.
மழைக்கு ஒதுங்கியவருக்கு தர்ம அடி: குடிபோதையில் 4 பேர் அராஜகம்
x
புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை அருகே மழைக்காக சாலையோர கடையோரம் ஒதுங்கியவரை சிலர் தாக்கியுள்ளனர். கடையோரம், பிரசாந்த் என்பவர் ஒதுங்கி நின்றபோது, குடிபோதையில் வந்த 4 பேர் அவரை இடித்ததோடு, கற்களால் பிரசாந்தை அடித்து விட்டு சென்றுள்ளனர். 

இது குறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்ததால் அருகாமையில் இருந்த கடையின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து 4 பேரையும் அடையாளம் கண்டு அதில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை அதேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்